சினிமா

பாலிவுட் பிதாமகனில் சல்மான் கான்

கொலிவுட்டில் பாலா இயக்கத்தில் வெளியான “பிதாமகன்” பாலிவுட்டில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் சியான் விக்ரம், சூர்யா, சங்கீதா, லைலா ஆகியோர் இணைந்து நடித்தனர். (more...)...
Read more

துப்பாக்கியில் நடிக்கவில்லை: சரத்குமார்

இளையதளபதி விஜய்யுடன் துப்பாக்கியில் நடிக்கவில்லை என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து சரத்குமார் கூறுகையில், எனது அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு இப்போதுதான் சென்னை திரும்பினேன். உடனே துப்பாக்கியில் நடிப்பது குறித்து ஏகப்பட்ட அழைப்புகள் வந்தது. (more...)...
Read more

ஊடகத்தினருக்காக திரையிடப்பட்ட ‘ஸ்ரீதர்’ படம்

சதீஷ் ஃபிலிம் கார்பரேஷன் வழங்கும், தேவி ஸ்ரீதேவி சதீஷ் தயாரிப்பில் ''ஸ்ரீதர்'' படம் வெளியாகியுள்ளது. ஊடகத்தினருக்காக 'ஸ்ரீதர்' படம், சென்னை ஃ போர் பிரேம்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது. தெலுங்கிலிருந்து 'ஸ்ரீதர்' என்ற பெயரில் தமிழில் 'டப்' செய்துள்ளார்கள். இதில் நாயகன் சித்தார்த், ஸ்ருதி ஹாசன் மற்றும் ஹன்ஷிகா இருவருடனும் இணைந்து நடித்துள்ளார். (more...)...
Read more

திவ்யா படத்துக்கு மதவாதிகள் எதிர்ப்பு மன்னிப்பு கேட்டார் உபேந்திரா

திவ்யா நடித்த கன்னட படத்துக்கு மதவாதிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஹீரோ உபேந்திரா மன்னிப்பு கேட்டார். உபேந்திரா, திவ்யா நடித்துள்ள கன்னட படம் ‘கடாரி வீரா சுரசுந்தராங்கி’. அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் கடந்த வாரம் வெளியானது. இதில் சில காட்சிகள் இந்து கடவுளை சிறுமைப்படுத்துவதாகவும், மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் இருப்பதாக கூறி இந்து மத தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். (more...)...
Read more

ரவிதேஜா படத்தில் இருந்து திரிஷா விலகல்

பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் ‘சர் ஒஸ்தாரா’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ரவி தேஜாதான் அவரை ஜோடியாக்க சிபாரிசு செய்ததாகவும் இயக்குனர் பரசுராம் அதை ஏற்று தேர்வு செய்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் திரிஷா தற்போது திடீரென்று அப்படத்தில் நடிக்க முடியாது என கூறி விலகிவிட்டார். இது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரவி தேஜாவும் அதிர்ச்சியாகியுள்ளார். இதுகுறித்து திரிஷாவிடம் கேட்டபோது ஏற்கனவே சில பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளளேன். (more...)...
Read more

குடும்பப்படத்தை ரசிகர்கள் ஆதரிப்பார்கள்: இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் குணசித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், 'ஆரோகணம்' என்ற குடும்பப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சம்பத், ஜெயபிரகாஸ் மற்றும் புதுமுகங்கள் வீரேஷ், ஜெய் குஹனி ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்கள். தாய் அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்கும் இளசுகளின் வாழ்க்கையை உருக்கமாக எடுத்துள்ளோம். (more...)...
Read more

நான் ஈ படம் ரூ.5 கோடிக்கு விற்பனையாகி சாதனை

தெலுங்கில் தயாராகி தமிழில் டப் செய்யப்பட்டு, வெளியாக இருக்கும் நான் ஈ படம் ரூ.5 கோடிக்கு விலைபோயுள்ளது. தெலுங்கில் ஈகா என்ற பெயரில் இந்தப் படம் வெளியாக உள்ளது. நானி, சமந்தா, சுதீப் நடித்து இருக்கும் இப்படத்திற்கு மரகதமணி இசையமைத்து இருக்கிறார். இந்திய சினிமாவில் கிராபிக்ஸ் காட்சிகளின் உச்சம் என்று சொல்லும் அளவுக்கு பல நாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பு இதில் உள்ளதாம். (more...)...
Read more

சிவாஜி வீட்டில் படமான மிரட்டல்

மெஜஸ்டிக் மல்டி மீடியா தயாரிக்கும் படம், ‘மிரட்டல்’. விநய், ஷர்மிளா, பிரபு, சந்தானம், கஞ்சா கருப்பு, மன்சூரலிகான், பாண்டியராஜன் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, டி.கண்ணன். இசை, பிரவீன் மணி. பாடல்கள்: வாலி, பா.விஜய், கபிலன். இப்படத்தின் பாடல் சி.டியை வெளியிட்ட இயக்குனர் ஆர்.மாதேஷ், நிருபர்களிடம் கூறியதாவது: விநய்க்கு இருக்கும் ‘சாக்லெட் பாய்’ இமேஜை இப்படம் மாற்றும். ஷர்மிளாவுக்கு கூத்துப்பட்டறையில் நடிப்பு மற்றும் தமிழில் பேச பயிற்சி அளிக்கப்பட்டது. (more...)...
Read more

இரண்டாவது நாயகியாக நடிப்பது ஏன்?

‘சமர்’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிப்பது ஏன் என்பது குறித்து சுனேனா கூறியதாவது: தற்போது ‘நீர்ப்பறவை’யில் நடிக்கிறேன். இதுவரை நடித்த கேரக்டர்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது. எனக்கு திருப்புமுனையாக அமையும். ‘மைக் செட் பாண்டி’யில் பணக்காரப் பெண்ணாக வருகிறேன். ‘சமர்’ படத்தில் இரண்டாவது நாயகியாக நடிப்பது பற்றி கேட்கிறார்கள். (more...)...
Read more

என் மகளை நடிகை ஆக்கமாட்டேன் : ஸ்ரீதேவி முடிவு

என் மகளை நடிகை ஆக்கும் எண்ணம் இல்லை என்றார் ஸ்ரீதேவி. தமிழில் 1980களில் கொடி கட்டி பறந்த ஸ்ரீதேவி பின்னர் பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையானார். போனி கபூரை மணந்தபிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார். 15 வருட இடைவெளிக்கு பிறகு ‘இங்லிஷ் விங்லிஷ் படம் மூலம் சினிமாவில் ரீ என்டரி ஆகிறார். அவர் கூறியதாவது: 4 வயது முதலே நான் நடித்துக்கொண்டிருக்கிறேன். ஸ்டுடியோவை விட்டால் வீடு, வீட்டை விட்டால் ஸ்டுடியோ என்றுதான் வாழ்க்கை கழிந்தது. நடிப்புக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித் திருந்தேன். மற்ற பெண்களைப் போல் திருமணத்துக்கு பிறகு குழந்தைகளுடன் வாழ்க்கையில் செட்டில் ஆக எண்ணினேன். (more...)...
Read more